சின்னத்தம்பியை சீக்கிரம் பிடியுங்கள்.. விவசாயிகள் திடீர் போராட்டம்..ஏன், என்னாச்சு?
Recommended Video

திருப்பூர்: சின்னத்தம்பி யானையை வேகமாக பிடிக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
கோவையில் இருக்கும் தடாகம் பகுதியில்தான் இந்த சின்னத்தம்பி தனது குடும்பத்துடன் இருந்தது. ஆனால் இந்த சின்னத்தம்பி விவசாய நிலங்களை நாசம் செய்கிறது என்று சில விவசாயிகள் புகார் அளிக்கவே இது இடமாற்றம் செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி 25ம் தேதி வனத்துறை அதிகாரிகள் இதை பிடித்து சென்று டாப்சிலிப் காட்டுப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் அங்கிருந்து அது தப்பித்து வெளியே வந்தது.

பெரிய பயணம்
தற்போது தனது குடும்பத்தை தேடி இது தடாகம் காட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். சின்னத்தம்பி யானையை இன்னும் காட்டுக்குள் அனுப்ப முடியாமல் வனத்துறை கஷ்டப்பட்டு வருகிறது. சின்னத்தம்பி மிகவும் மெதுவாக செல்வதால், அதனால் தனது காட்டிற்கு சீக்கிரம் செல்ல முடியவில்லை.

என்ன பிரச்சனை
முதலில் சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்ற வனத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த முடிவை அரசு கைவிட்டது. மேலும், அந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விட அரசு முடிவெடுத்து இருக்கிறது.

என்ன பிரச்சனை
கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலையில் இருந்து இடம்பெயர்ந்த சின்னத்தம்பி யானை தற்போது உடுமலை பேட்டை அருகே இருக்கிறது. அங்குள்ள விளைநிலங்களில் இது தஞ்சம் புகுந்து இருக்கிறது. இதனால் அங்கு இருக்கும் விளைநிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

போராட்டம் செய்கிறார்கள்
இதனால் தற்போது சின்னத்தம்பி யானையை வேகமாக பிடிக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகிறார்கள். சின்னதம்பி யானையை உடனே பிடிக்கக் கோரி உடுமலைபேட்டையில் சாலைமறியல் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சின்னத்தம்பி வயல் வழியே செல்வதால் நிலம் பெரிய அளவில் சேதம் அடைவதாக அவர்கள் புகார் வைக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications