விடாமல் துரத்திய ஈகோ.. ஒரே சேலையில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
குடும்ப பிரச்சனை காரணமாக, இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பூர்: இளம் தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் - லாவண்யா. இருவருக்கும் கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது. ஆனால் இந்த இளம் தம்பதிக்கு குழந்தை கிடையாது.

லாவண்யா முத்துகிருஷ்ணனை விட கொஞ்சம் அதிகம் படித்தவர் என கூறப்படுகிறது. முத்துக்கிருஷ்ணன் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்குள் ஈகோ பிரச்சனை இருந்ததாகவும், இதனால் நிறைய சண்டையும் அடிக்கடி ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நேற்றுமுன்தினம் இரவுகூட இப்படித்தான் சண்டை நடந்துள்ளது. அப்போது வீட்டிலிருந்து பொருட்களை தூக்கி எறியும் சத்தம் அக்கம்பக்கம் வீடுகள் வரை கேட்டிருக்கிறது. வழக்கம்போல் சண்டை என்று அவர்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இந்நிலையில் நேற்றுகாலை இவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசுக்கு போன் செய்து தகவலை சொன்னார்கள். போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு பார்த்தால், இரண்டு பேருமே தூக்கில் சடலமாக கொண்டிருந்தனர்.
ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி இருவருமே பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். இது கொலையா? தற்கொலையா என இனிமேல்தான் தெரியவரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications