“குடும்பம் போச்சே..” சிதறிய உடல்கள் - பல்லடத்தில் கோர விபத்து.. ஓட்டுநருக்கு தர்ம அடி! பரபர வீடியோ
திருப்பூர்: பல்லடம் அருகே பொள்ளாச்சி சாலையில் கண்டெய்னர் லாரி மோதி 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், குடிபோதையில் லாரி ஓட்டி வந்த நபரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்து இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொள்ளாச்சி சாலை வடுகபாளையம் அருகில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது 2 நாட்களுக்கு முன் ஈச்சர் கண்டைனர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆம்னி வேனில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் மீது மோதிய லாரி
உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர். ஞானதுரை (27) என்பவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரின் தாய் ராஜம்மாள் (47), தந்தை செல்வராஜ் (48), உறவினர்கள் செல்வி, ஆசீர் கோவில்பிள்ளை, அகஸ்டின் ஆகிய 6 பேரும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள வடுகபாளையம் சென்றுள்ளனர்.

கோர விபத்து
பெண் பார்த்த பின்னர் ஆம்னி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 6 பேரும் பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரில் காரை ஓரமாக நிறுத்துவிட்டு பேசிக் கொண்டிருந்ததனர். அப்போது பல்லடத்தில் இருந்த செஞ்சேரிபுத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது படுவேகமாக மோதியது.

இருவர் பலி
இதில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, ராஜம்மாள் மருத்துவமனை செல்லும் வழியில் காலமானார். இந்த விபத்து நடந்தவுடன் கண்டெய்னர் லாரியின் ஓட்டுநரான உடுமலையை சேர்ந்த பட்டீஸ்வரனை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து தாக்கினர். ஓட்டுநர் சுயநினைவு இல்லாமல் தல்லாடியதால் அவரிடம் அங்கிருந்த மக்கள் குடிபோதையில் வண்டி ஓட்டினாயா என்று கேட்டார்.

பரபரப்பு வீடியோ
அப்போது ஒரு நபர் வேகமாக ஓட்டுநரை நோக்கி கம்பியால் தாக்க அவர் அங்கிருந்த ஒரு பள்ளத்தில்போய் விழுந்தார். "உன்னால ஒரு குடும்பம்போச்சு" என்று சொல்ல உயிரிழந்த பெண்ணின் உறவினர் உன்னால என் வாழ்க்கை போச்சடா.. அக்கா." என்று கதறும் வீடியோ காண்போர் மனதை பதற செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஓட்டுநர் பட்டீஸ்வரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications