திருப்பூரில் திடுக்! பணக்கார முதியவருக்காக.. மருமகளை மூளை சலவை செய்த மாமியார்!
திருப்பூர்: புதியதாக திருமணமாகி வீட்டிற்கு வந்த மருமகளை, பணத்திற்காக முதியவரின் ஆசைக்கு இணங்க மாமியார் வற்புறத்தியுளு்ள சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். இவருக்கு நீண்ட நாட்களாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் வரன் அமையவில்லை. இறுதியாக சமீபத்தில் கொடைக்கானலை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. சிறு வயதிலிருந்து வாழ்ந்த வீட்டை விட்டு பிரிந்து கணவன் வீட்டுக்கு சென்ற இளம்பெண், அவரும், அவருடைய குடும்பமும்தான் தன்னுடைய பாதுகாப்பு என்று கருதியிருந்தார். ஆனால், கணவன் வீட்டில் நடந்த சம்பவமே வேற..

அதாவது தொடக்கத்தில் மாமியர் ஜாடை மாடையாக இவரை திட்டி வந்தாலும், ஒரு கட்டத்தில் நன்கு அரவணைத்து செல்ல தொடங்கிவிட்டார். கொஞ்ச நாட்களில் இவரை விழுந்து விழுந்து கவனித்திருக்கிறார். மாமியாரின் பாசத்தை இளம்பெண்ணும் உண்மை என்று நம்பியுள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, மாமியாரின் சுய ரூபம் இவருக்கு தெரிய வந்திருக்கிறது. அதாவது, மாமியார் சரியான பணத்தாசை பிடித்த பெண்ணாக இருந்திருக்கிறார். அவருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். அதை எந்த வழியில் செய்தாலும் பிரச்னையில்லை.
இந்த பேராசை மருமகளையே பலிகடா ஆக்கும் அளவுக்கு தீவிரமடைந்திருக்கிறது. அதாவது உதயகுமார் வீட்டிற்கு வயதான முதியவர் ஒருவர் வந்து சென்றிருக்கிறார். இவருக்கு சொத்துக்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன. அதே நேரம் உதயகுமார் மனைவியான இளம்பெண் மீதும் ஒரு கண் இருந்திருக்கிறது. இதை தெரிந்துக்கொண்ட மாமியார், இளம்பெண்ணை பேசி மயக்கியுள்ளார். முதியவரை வளைத்து போட்டுவிட்டால் ஏராளமான சொத்துக்களை அனுபவித்துவிடலாம், வாழ்க்கையில் ராஜபோகமாக வாழலாம் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
வாழ வந்த இடத்தில், தனது வாழ்க்கைக்கு சொந்த மாமியாரே கொள்ளி வைப்பதை கேட்டு அதிர்ச்சியுற்ற இளம்பெண், இதுபோன்று தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனாலும் மாமியார் மூளை சலவையை விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து ஆசை வார்த்தைகளை கூறி வந்திருக்கிறார். இது குறித்து கணவரிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. எனவே, கணவர் வீட்டிலிருந்து தப்பித்து கொடைக்காணலில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அந்த ஊர் போலீசார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனவே உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக பணக்கார முதியவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சொந்த மாமியாரே, மருமகளை பணத்திற்காக காவு வாங்க முயன்றுள்ள சம்பவம் உடுமலையை உலுக்கியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications