Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சை குத்திருக்கியே.. இது யாரு.. என்ன உறவு.. 33 வயது காதலியை அறைந்தே கொன்ற 23 வயது காதலன்!

பெண்ணை கொன்ற இளைஞர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    33 வயது காதலியை அறைந்தே கொன்ற 23 வயது காதலன்!

    திருப்பூர்: "பச்சை குத்திட்டு இருக்கியே.. இது யார் பேரு.. அவனுக்கும் உனக்கும் என்ன உறவுன்னு கேட்டேன்.. மழுப்பலா பதில் சொன்னாள்.. அதான் பளார்ன்னு ஒரு அறை வெச்சேன்.. கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்" என்று அதிர்ச்சி வாக்குமூலம் தந்துள்ளார் 33 வயது கள்ளக்காதலியை கொன்ற 23 வயது இளைஞர்!

    திருப்பூர் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். அதே ஓட்டலில் வேலை பார்த்த திருமங்கை என்ற 33 வயது பெண்ணை காதலித்து, 5 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார். ராமபுதூரில் புது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், திடீரென மனைவியை காணவில்லை.

    சம்பவத்தன்று, மோகனூரில் உள்ள ஒரு கோவிலுக்கு போறேன் என்று ஸ்கூட்டி எடுத்து கொண்டு போனவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் பதறி போன ரமேஷ், மனைவியை தேடி அலைந்தார். அப்போதுதான், மூலனூர் அருகே கவுண்டப்பகவுண்டன்புதூரில் அமராவதி ஆற்றங்கரையோரம், திருமங்கை சடலமாக கிடந்தது தெரியவந்தது.

    மூலனூர் போலீசார்

    மூலனூர் போலீசார்

    திருமங்கையின் கைகள் துப்பட்டாவால் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது... வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது... கழுத்து இறுக்கப்பட்டு இருந்தது... தகவலறிந்து மூலனூர் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு விசாரணை ஆரம்பித்தனர். அவரது செல்போனும் ஆராயப்பட்டது.. அப்போதுதான், சேலத்தை சேர்ந்த தனபால் என்பவருடன் திருமங்கை கடைசியாக பேசியது தெரியவந்தது.

    தனபால்

    தனபால்

    தனபால் சொல்லும்போது, "23 வயதான நான் நாமக்கல்லில் வேலை பார்த்தபோது ஒரு ஓட்டலுக்கு சாப்பிட போனேன். அப்போதுதான் முதன்முதலில் திருமங்கையை பார்த்தேன். அவருக்காகவே அதே ஓட்டலுக்கு திரும்ப திரும்ப சாப்பிட போனேன்.. நெருக்கமாக பழகினோம்.. என் ரூமுக்கும் அடிக்கடி வரவழைத்து ஜாலியாக இருப்போம். கல்யாணம் செய்ய எனக்கு எண்ணம் இருந்தது.. ஆனால் எனக்கு வயசு ரொம்ப கம்மி என்பதால், அதற்கு திருமங்கை ஒத்துக் கொள்ளவில்லை. இந்த சமயத்தில்தான், ரமேஷை காதலித்து, கல்யாணமும் செய்துள்ளார்.

    யார் அது?

    யார் அது?

    ஆனால் இன்னொரு நபருடனும் திருமங்கை தொடர்பில் இருந்தார். இதை தவிர, அவரது கையில் ஆடம்ஸ் என்று பச்சை குத்தி இருந்ததை பார்த்தேன்.. அது யார் பெயர் என்று கேட்டதற்கு சரியாக பதில் சொல்லவில்லை.. அதனால் அதை பற்றி விசாரிக்கவே ரூமுக்கு வரவழைத்தேன்.. உல்லாசமாக இருந்தோம்.

    பச்சை குத்திய பெயர்

    பச்சை குத்திய பெயர்

    அந்த சமயத்தில், ஆடம்ஸ் என்பது யார் பெயர் என்று கேட்டேன். அது தன் கணவர் ரமேஷின் இன்னொரு பெயர்தான் என்று சொன்னார். அதுவரை இல்லாமல் திடீரென பச்சை குத்தியதும், அதிலும் பெயர் கேள்விப்படாத பெயராக இருக்கவும் நான் தொடர்ந்து பச்சை குத்திய பெயரை பற்றியே கேட்டேன். ஆரம்பத்தில் உறுதியாக ரமேஷ் பெயர்தான் என்றவர் திடீரென மழுப்பலான பதிலை சொன்னார்.

    கொன்றேன்

    கொன்றேன்

    அந்த ஆத்திரத்தில்தான் அறைந்துவிட்டேன். கீழே மயங்கி விழுந்ததும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டேன்.. கைகளையும் அதே துப்பட்டாவால் கட்டி, சடலத்தை ஒரு போர்வையால் சுற்றினேன்.. பின்னர் ஊருக்கு போவதாக சொல்லி என் நண்பனின் காரை வாங்கி, அதில் சடலத்தை ஏற்றிக் கொண்டுவந்து மூலனூர் பகுதியில் சாலையோரம் வீசி சென்றேன்" என்றார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+