அதிகாலையிலிருந்து தடுப்பூசிக்கு காத்திருந்த வட மாநில தொழிலாளர்கள்.. ஆவேசமான திருப்பூர் மக்கள்
திருப்பூர்: திருப்பூரில் தடுப்பூசி போட வடமாநில தொழிலாளர்கள் திரண்டதால் உள்ளூர் மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களை பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக அழைத்து வந்துள்ளது. அவர்களில் பெரும்பகுதியினர் வட மாநில தொழிலாளர்களாகும்.
அழைத்துவரப்பட்ட ஊழியர்கள் அதிகாலை 2.30 மணி முதல் வரிசையில் நின்றுள்ளனர். ஆனால், காலையில் அப்பகுதி மக்கள் தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது, ஏற்கனவே நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் முன்னால் நிற்பதை பார்த்த ஊர் மக்கள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. போலீசாரும் அதிகாரிகளும் உள்ளூர் மக்களை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர். இதனிடையே உள்ளூர் மக்கள் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என, தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அதனை தொடர்ந்து உள்ளூர் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நாடு முழுக்க தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் இதுபோன்ற மோதல்களும் நடைபெற ஆரம்பித்துள்ளன. மத்திய அரசு உடனடியாக போதிய தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார்கள் அதிகாரிகள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications