சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பஞ்சாங்கம், ஆதார், ரூ10 நாணயங்கள் வைத்து பூஜை.. என்ன நடக்கும்?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தமிழ்ப் பஞ்சாங்கம், ஆதார் அட்டை, மணி, 10 ரூபாய் நாணயங்களை வைத்து பூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலானது கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி சிறப்பு வாய்ந்தது.
சுப்பிரமணிய சுவாமியின் பக்தர்களுக்கு கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய சுவாமி உத்தவிடுவார்.

உத்தரவு
இது போல் கனவில் உத்தரவு வந்தவர்கள் கோயில் நிர்வாகத்திடம் விவரங்களை கூறுவர். பின்னர் சுவாமியிடம் பூப்போட்டு கேட்டு அதில் உத்தரவு வந்தபின்னர் அந்த கனவில் சொன்ன பொருட்களை பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

உத்தரவு பெட்டி
இவ்வாறு கோயில் முன் மண்டப தூணில் வைத்துள்ள உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவு வரும் வரை அந்த பெட்டியில் பழைய பொருட்கள் இருக்கும்.

லதா சம்பத்குமார்
இதுபோல் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள காலத்தில் அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது பாசிட்டிவாகவும் இருக்கும் , நெகட்டிவாகவும் இருக்கலாம். இந்த நிலையில் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த லதா சம்பத்குமாரின் கனவில்தான் இந்த உத்தரவு வந்துள்ளது.

தமிழ் பஞ்சாங்கம்
அவரது கனவில் தமிழ் பஞ்சாங்கம், ஆதார் அட்டை, மணி, ரூ 10 நாணயங்கள் 10 எண்ணிக்கை ஆகிய பொருட்களை வைத்து உத்தரவு பெட்டியில் சனிக்கிழமை வைத்து பூஜிக்கப்பட்டது. பாம்பு பஞ்சாங்கமானது பாரம்பரியமிக்கது, நமது பாரத பாரம்பரியம் உயிர்ப்புடன் எழுச்சி பெறும்.
ஆதார் அட்டையின் மூலம் இந்த தேசத்தில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

ஒலிக்கும்
மணி என்பது கோயில்களில் ஒலிக்கக் கூடியது. இதனால் பக்தர்களும் நாட்டு மக்களும் சுபிட்சம் பெறுவார்கள். 10 ரூபாய் நாணயங்கள் பொருளாதாரத்தை குறிக்கும். நாட்டின் பொருளாதாரம் சிறப்புற்று விவசாயம், தொழில் துறை வளர்ச்சி பெறும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா வல்லரசாக மாறும் என்பதையே இந்த பொருட்கள் உணர்த்துவதாக குறிப்பிடப்படுகிறது.

நல்லது
லதா சம்பத்குமார் தங்கள் வீட்டில் பஞ்சாங்கத்தை வைத்தால் வீட்டிற்கு நல்லது என கணவரிடம் கூறிவிட்டு தூங்க சென்ற போது வீட்டுக்கு நல்லது ஏற்பட்டால் போதாது, நாட்டுக்கும் நல்லது ஏற்பட வேண்டும் என முருகன் கனவில் தோன்றி கூறியதை அடுத்தே லதா கோயில் நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த மே மாதம் முதல் வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள் தூள் வைத்து பூஜிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications