கரு பழனியப்பன் பேச்சால் அடிதடி.. திருப்பூர் ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் மீது தாக்குதல் - பரபரப்பு
திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட இயக்குநர் கரு பழனியப்பன், காந்தியை ஆர்எஸ்எஸ் தான் கொன்ற பிறகு இந்தியாவை காந்தி நாடு என்று அறிவிக்க பெரியார் கூறினார் என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன சுந்தரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்து அமைப்பினர், பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் இந்த புத்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருப்பூர் வேலன் ஹோட்டல் வளாகத்தில் புத்தக திருவிழா தொடங்கி உள்ளது. மொத்தம் 140 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக திருவிழா பிப்ரவரி மாதம் 2 ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் புத்தக திருவிழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று நடந்த புத்தக திருவிழாவில் திரைப்பட இயக்குநரும், பெரியார் பற்றாளருமான கரு பழனியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் புத்தக திருவிழாவில் பேசினார். அப்போது, காந்தியை ஆர்எஸ்எஸ் தான் கொன்றது. காந்தியை கொன்ற பிறகு இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்ட பெரியார் கோரிக்கை வைத்தார் என்று கூறினார்.
இதற்கு திருப்பூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன சுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இன்னொரு தரப்பினர் மோகன சுந்தரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உருவானது. அங்கிருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தடுக்க முடியவில்லை.

இந்த வேளையில் ஒருவர் ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் மோகன சுந்தரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்பட பிற இந்து அமைப்பினர், பாஜகவினர் திரண்டு வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் உள்பட பலரும் அங்கு வந்தனர்.
ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் மோகன சுந்தரத்தை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்.இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மோகன சுந்தரம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் புத்தக திருவிழா நடக்கும் இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications