திருப்பூரில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் ஐடி என்ஜினியர் கார்த்திக்.. காட்சியை கண்டு அதிர்ந்த குடும்பம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் என்பவருடைய மகன் கார்த்திக் குமார். இவருக்கு 30 வயது ஆகிறது. சாப்ட்வேர் என்ஜினியராக பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் தடைப்பட்டு வந்ததாம். திருமணம் ஆகாத ஏக்கத்தில் இவர் செய்த செயல், மொத்த குடும்பத்தையும் ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைக்கு திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கிறது..ஆனால் பெண் தான் பலருக்கும் கிடைப்பதே இல்லை.. கடந்த 30 வருடங்களில் எல்லா வீடுகளிலும் இரண்டு குழந்தை அல்லது ஒரு குழந்தை என்று பிறந்துள்ளதால், பாலின விகிதாசாரத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் பல சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாவே உள்ளது. இதனால் ஆண் பெண் இடையே திருமண வயது விகிதம் 10 வயது வரை கூட அதிகமாக உள்ளது. அதாவது ஒரு ஆண் திருமணம் செய்ய திருமண வயதை எட்டினாலும் 10 வருடம் காத்திருக்கும் அளவிற்கு சில சமுதாயத்தில் சூழல் நிலவுகிறது.

அதேநேரம் திருமணம் பல ஆண்களுக்கு ஆகாமல் இருக்க வயது முக்கிய காரணமாக உள்ளது. பெண்கள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருப்பதும் காரணமாக பார்க்கப்படுகிறது. படித்த, நன்கு வேலையில் உள்ள பெண்கள், படிக்காத, சரியான வேலையில் இல்லாத ஆண்களை திருமணம் செய்ய விரும்புவது இல்லை. அதேபோல் வேறு சாதியாக இருந்தாலும், நன்கு படித்து, வேலையில் உள்ளவர்களை திருமணம் செய்யவே பெண்கள் விரும்புகிறார்கள்.. இதன் காரணமாக படிக்காத பல இளைஞர்கள் திருமணம் ஆகாமல் ஏக்கத்தில் சுற்றுகிறார்கள்.
அதேநேரம் படித்து நல்ல வேலையில் இருந்தாலும், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டாரா என்பதை பெண்கள் பார்க்கிறார்கள். உடன் அக்காள், தங்கை இருக்கிறார்களா, லோன் இருக்கிறதா என்பதையும் பார்க்கிறார்கள்.. அதேபோல் ஜாதகம், தோஷம், வயது போன்ற காரணங்களையும் கூறுகிறார்கள். சில சமூகத்தில் உறவுகள் நண்பர்கள் வட்டத்தில் திருமண வயதில் பெண்கள் மிகவும் குறைவாகவே இருப்பதால் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் பலர் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளைஞருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த ஏக்கத்தில் அவர் செய்த காரியம் குடும்பத்தினரை ஆடிப்போக வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி சாந்தகுமார் என்பவருடைய மகன் கார்த்திக் குமார் (வயது 30). சாப்ட்வேர் என்ஜினியராக பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடி வேலை செய்தார். இவருக்கு திருமணம் நடத்தி வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவரது திருமணம் தடைபட்டு கொண்டிருந்தது. இதனால் திருமணம் ஆகாத ஏக்கத்தில் அவர் கவலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
நேற்று முன்தினம் கார்த்திக் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருமணமாகாத ஏக்கத்தில் என்ஜினியர் உயிரைவிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications