திருப்பூரில் மகனுடன் சாப்பிட்ட மாலா.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. அதிர்ந்து போன அக்கம் பக்கம்
திருப்பூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாமாங்குளம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருடைய மனைவி மாலா. வறுமையின் காரணமாக திருப்பூருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகனுடன் வந்த மாலா, திருப்பூர் மங்கலம் ரோடு கோழி பண்ணை அருகே வசித்து வந்தார். இந்நிலையில் மகனுடன் சேர்ந்து அவர் எடுத்த முடிவு பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருப்பூர் மாநகரத்தை பொறுத்தவரை வந்தாரை வாழவைக்கும் ஊராக இன்று வரை தொடர்கிறது. லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்களும், பல லட்சம் தமிழர்களும் பிழைப்புத்தேடி வந்த ஊராக இருக்கிறது. திருப்பூர் மாநகரம் கடந்த 25 வருடங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டது. திருப்பூரில் பல ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன.

திருப்பூரை பொறுத்தவரை படித்திருக்க வேண்டும்.. தொழில் தெரிந்திருக்க வேண்டும்... முன் அனுபவம் வேண்டும் என்று எதுவுமே கேட்க மாட்டார்கள்.. வரும் அத்தனை பேருக்கும் வேலை கொடுத்து வாரம் வாரம் ஊதியமும் கொடுத்து அவர்களை வாழ வைத்து வருகிறது. வீட்டை விட்டு ஓடிப்போகும் பல காதலர்களின் முதல் சாய்ஸ் ஆக திருப்பூர் தான் இருக்கிறது. யார் வந்தாலும், வீடு, வேலை, உணவு என மூன்றும் கிடைத்துவிடும். இதன் காரணமாகவே இன்றும் பலர் வேலை தேடி திருப்பூருக்கு வருகிறார்கள். அப்படி வந்த பெண் ஒருவர் எடுத்த முடிவு கலங்க வைத்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாமாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி மாலாவுக்கு 36 வயது ஆகிறது. இவர்களுக்கு சுஜித் குமார்(11) என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருண்குமார் காலமானார். இதனால் மாலா தனது மகனை அழைத்துக் கொண்டு திருப்பூர் மங்கலம் ரோடு கோழி பண்ணை அருகே உள்ள கே.டி.கே.தோட்டம் பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகனுக்கு உணவில் மருந்து ஒன்றை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவரும் அதனை குடித்தார்.
சிறிது நேரத்தில் இருவரும் வீட்டில் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாலா பரிதாபமாக இறந்தார். 11 வயதாகும் சுஜித் குமாருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து மாலா எதற்காக உயிரை விட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை இழந்து, தந்தையையும் இழந்த சுஜித் குமாரின் நிலை கலங்க வைத்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications