வெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்
Recommended Video
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சத்தமே இல்லாமல், உலக சாதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் மற்றும் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைவிரல் ரேகையை வைத்து தேசியக் கொடி வடிவமைக்கபட்டது. இந்த கொடியானது 112 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.

உடுமலையில் அப்துல் கலாம் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் இந்த உலக சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 73 வது சுதந்திர தினம் என்பதால் 73 நபர்களை வைத்து அவர்களின் பெருவிரல் ரேகையில் தேசியக் கொடியை 26 நிமிடங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ரேகைகளை பதிய வைத்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த உலக சாதனை முயற்சி, டிசிபி உலக சாதனை அமைப்பு நடுவர்களின் மேற்பார்வையில் நடந்தது. அப்துல் கலாம் உருவத்தைக் கொண்ட உடுமலை கலாம் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு இந்த சாதனையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
உடுமலைபேட்டையில் நிகழ்த்தப்பட்ட இந்த உலக சாதனைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உலக சாதனை என்பது, உடனே நடந்து விடக்கூடிய விஷயம் அல்ல. அதற்கான, முயற்சியும், எழுச்சியும் வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினார். தமிழகத்தில் இது போல இன்னும் பல சாதனை முயற்சிகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications