கேஸ் அடுப்பு பைப்பில் தகதகவென மின்னிய தங்க துண்டுகள்!
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி: அடேங்கப்பா.. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. எப்படி எல்லாம் தங்கம் கடத்தறாங்க தெரியுமா? வேற லெவல் கடத்தல்தான்! கேஸ் அடுப்பு பைப் வரை தங்கம் கடத்துவது வந்துவிட்டது!
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரிலிருந்து மலிண்டா ஏர்லைன்ஸ் விமானம் வந்து நின்றது. இதிலிருந்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் திருவாடானையை சேர்ந்த நபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது.

அவர் கையில் காஸ் அடுப்பை கொண்டு வந்திருந்தார். அதனை உடனடியாக வாங்கி அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். கேஸ் அடுப்பு பைப்பில் தகதகவென மின்னியது தங்க துண்டுகள்!
வெறும் துண்டுகள்தானே என்று சொல்லிவிட முடியாது.. அவை மொத்தம் 24 கேரட் 580 கிராம் தங்கமாம். அதாவது 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பு தங்கமாம். அதனைதான் கேஸ் பைப்புக்குள் திணித்து கடத்தி வந்திருக்கிறார்.

இந்த அளவுக்கு யோசித்து தங்கத்தை கடத்தி வந்தவர் பெயர் சக்கரவர்த்தி என்பதாம். இப்போது அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி கொண்டுள்ளார் சக்கரவர்த்தி!












Click it and Unblock the Notifications