திருச்சி ஸ்ரீரங்கம் பெரியார் சிலை விவகாரம்.. 29ம் தேதி முக்கியமான நாள்.. அர்ஜுன் சம்பத் பேட்டி
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் மனது புண்படும்படி கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் பக்தர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் வேண்டுமென்றே கோவிலுக்கு முன்பு தந்தை பெரியார் சிலையை திராவிட கழகம் நிறுவினர்.இது தொடர்பாக போராடியதற்கு எதிராக எங்கள் மீது போடப்பட்ட வழக்கில் 29ம் தேதி தீர்ப்பு வருகிறது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
திருச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டியில் கூறுகையில், "கடந்த 2006 ஆம் ஆண்டு 108 திவ்ய தேசங்களில் முதன்மையான தளமாக விளங்கக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக, அப்போதைய முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியின் ஒத்துழைப்பு காரணமாக திராவிட கழகம் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், எந்த விதமான அனுமதியும் பெறாமல் தந்தை பெரியார் சிலையை நிறுவியுள்ளனர்.

கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் மனது புண்படும்படி கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் பக்தர்களின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் வேண்டுமென்றே கோவிலுக்கு முன்பு தந்தை பெரியார் சிலையை திராவிட கழகம் நிறுவினர்.
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு
இந்நிலையில் சிலையை நிறுவினால் இந்து மக்களுக்கு சார்பாக போராட்டங்கள் நடைபெறும் என்பதால் வேண்டுமென்றே இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீது திருச்சி நடுவர் நீதிமன்றம் நீதி அரசர் திறப்பு வழங்குவதாக இருந்தது பின்பு வருகின்ற 29ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.
திக கொள்கையில் திமுக
திமுகவின் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு திராவிட கழகம் அவர்களின் கொள்கையை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றை கண்டித்து இந்து மக்கள் கட்சி தொடர்ந்து சட்ட ரீதியான போராட்டங்களை தொடர்வோம்.
நம்பிக்கை
இத்தகைய பிரச்சினை தமிழ்நாட்டில் இந்து கோயிலுக்கு எதிராக மட்டுமே நடைபெற்று வருகிறது. நாங்கள் முழுமையாக நீதிமன்றத்தை நம்பி உள்ளோம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஸ்டாலினுக்கு தூக்கம் இல்லை
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமருவார்..அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதேசமயம் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமித்ஷா அவர்கள் மற்றும் மோடி அவர்கள் தமிழகம் வந்த நாள் முதல், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்கிறார்.
திமுகவின் சதி விஜய்
திமுகவின் சதியால் ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் மக்களை ஏமாற்றுவதற்காக இருவரும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறார்கள் ஒருபோதும் மக்களை ஏமாற்ற முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், மோடியின் அலை வீச தொடங்கி உள்ளது" இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications