ஜன.19-ல் மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம்!
திருச்சி: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் நிலையில் ஶ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி ஜனவரி 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 நாட்கள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
அயோத்தியில் ஜனவரி 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இத்திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல சர்ச்சைகளும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படாமலேயே திறக்க சங்கராச்சாரியார்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவே ஒரு அரசியல் நிகழ்வுதான் என விமர்சித்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக இந்நிகழ்வை புறக்கணித்துள்ளன.

தமிழ்நாடு வருகை: இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகை தருகிறார் பிரதமர் மோடி. ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக தமிழ்நாட்டுக்கு வரும் 19-ந் தேதி பிரதமர் மோடி வருகிறார். அன்றைய தினம் கேலோ விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம்: பின்னர் திருச்சி வரும் பிரதமா், சாலை மாா்க்கமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று அரங்கநாத சுவாமியை தரிசனம் செய்கிறாா். திருச்சியிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரதமரின் வருகையையொட்டி அவரது சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், மற்றும் திருச்சி காவல்துறை உயரதிகாரிகள் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தியுள்ளனா்.
ஶ்ரீரங்கத்தில் ஆளுநர் ரவி: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று திருச்சி வருகை தந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வரவேற்றார். பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்ற ஆளுநர் ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்துக்கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் பிரதமர் நரேந்திர மோடி வருகை குறித்து கோயில் நிா்வாகிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆளுநர் ரவி ஆலோசனை செய்தார் .
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications