டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று நீர் திறப்பு
திருச்சி: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது. இதனையடுத்து டெல்டா பாசன விவசாயத்துக்காக கல்லணையில் இன்று நீர் திறந்துவிடப்படுகிறது.
கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியை எட்டிய நிலையில் டெல்டா பாசன விவசாயத்துக்காக நீர் திறந்துவிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின்,மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டார்.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது. இதனையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. கல்லணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாவட்ட ஆட்சியர்கள், எம்.எல்.ஏக்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதனால் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் எந்த தடையுமின்றி கடைமடை பகுதியையும் விரைவாக சென்றடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications