வைகோவின் சமத்துவ நடைபயணம்.. திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திருச்சி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் திருச்சியியில் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை சமத்துவ நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்றது.

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணத்தை வைகோ மேற்கொள்கிறார். 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது இந்த நடைபயணத்தில் தினந்தோறும் 17 கிலோ மீட்டர் வரை வைகோ நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நடைபயணத்தை முதல்வர் திருச்சியில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடைபயணத் தொடக்க விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
டிரோன்கள் பறக்கத் தடை
முதல்வா் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications