திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் இருவருக்கு கொரோனோ அறிகுறி... அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை

Google Oneindia Tamil News

திருச்சி: மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இருவருக்கு கொரோனோ அறிகுறி தென்பட்டதால் அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேருக்கு கொரோனோ அறிகுறி தென்பட்டுள்ளது. இதனை திருச்சி விமான நிலைய சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வின் மூலம் கண்டறிந்தனர். இதையடுத்து கொரோனோ அறிகுறி இருந்த அந்த 3 வயது குழந்தை மற்றும் 46 வயது நபர் திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Corono virus symptoms for two persons in Trichy

அங்கு அவர்கள் தனி வார்டில் (ஐசோலேஷன் பிரிவில்) அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சோதனை முடிவுகள் முழுவதுமாக கிடைத்த பின்னரே கொரோனோ பாதிப்பா என்பதை பற்றி ஊர்ஜிதம் செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனிடையே கொரோனோ அறிகுறி தானே தவிர இன்னும் கொரோனோ என உறுதிசெய்யவில்லை என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று முதல், மலேசியா மற்றும் இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே விமானத்தில் திருச்சிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாவிற்காக மலேசியா வழியாக இந்தியாவிற்கு வெளிநாட்டினர் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொழில் காரணமாக பயணம் செய்பவர்களுக்கும் (மலேசிய தூதரகத்தின் அனுமதி பெற்ற பின்பு) மட்டுமே இந்தியா வர அனுமதி வழங்கப்படுகிறது.

கூகுள் ஆபீசிலும் கால் வைத்த கொரோனா வைரஸ்.. பரபரப்பில் பெங்களூர் கூகுள் ஆபீசிலும் கால் வைத்த கொரோனா வைரஸ்.. பரபரப்பில் பெங்களூர்

Recommended Video

    கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி.. கர்நாடகாவை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

    மேலும், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலேசியா வழியாக இந்தியாவிற்கு வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    English summary
    Corono virus symptoms for two persons in Trichy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X