இழப்பீடு தொகை போதாது.. காவிரி ஆற்றில் புதைந்து விவசாயிகள் நூதனப் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கஜா புயல் பாதிப்பிற்கு நியாயமான நிவாரணம் கேட்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கொட்டும் மழையில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

கஜா புயல் பாதிப்பிற்கு நியாயமான நிவாரணம் கேட்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் கொட்டும் மழையில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள்
நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

delta farmers staged protest in cauvery river

கடந்த 16-ந்தேதி தாக்கிய கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்படைந்தது. கஜா புயலால் தம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு உரிய நியாயமான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் கொட்டும் மழையில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் இருந்த விளை பொருட்களான நெல், தென்னை, வாழை, கரும்பு, பலா, கொய்யா போன்ற எண்ணற்ற பயிர்கள் ஒடிந்து விழுந்தும், நீரில் மூழ்கியும் சேதம் அடைந்தது. விவசாயிகள் தம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். 8 வழி சாலைக்கு விவசாய நிலங்களை எடுக்கும்போது பாதிப்புக்கு உண்டான விவசாய பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கியதை விட, கஜா புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தரும் இழப்பீட்டு தொகை குறைவாக உள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+