திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள்.. ஊருக்கு செல்வோர் கவனத்துக்கு!

Google Oneindia Tamil News

திருச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகர போலீசார் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தனர். இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின.

தீபாவளியை முன்னிட்டு சென்னையைப் போல் திருச்சியலும் கூட்டநெரிசல் காரணமாக மன்னார்புரம் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்படுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் வெளி மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

27-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி, திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

 தீபாவளி: தந்தேரஸ் தொடங்கி யம துவிதியை வரை ஐந்து நாள் அட்டகாசமாக கொண்டாடலாம் தீபாவளி: தந்தேரஸ் தொடங்கி யம துவிதியை வரை ஐந்து நாள் அட்டகாசமாக கொண்டாடலாம்

மதுரை பேருந்துகள்

மதுரை பேருந்துகள்

இதனால், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகர போலீசார் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தனர். இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. அங்கிருந்து வெளிமாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட்டு சென்றன.

மன்னார்புரம் ரவுண்டானா

மன்னார்புரம் ரவுண்டானா

இதில் தஞ்சாவூர் வழித் தடத்தில் செல்லும் பேருந்துகள் திருச்சி சோனா மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன்பிருந்து இயக்கப்பட்டன. புதுக்கோட்டை மற்றும் மதுரை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் மன்னார்புரம் ரவுண்டானாவில் இருந்து இயக்கப்பட்டன.

தென்மாவட்ட பேருந்துகள்

தென்மாவட்ட பேருந்துகள்

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும். மன்னார் புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சென்றுவரும் வகையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

போலீசார் பாதுகாப்பு

போலீசார் பாதுகாப்பு

இதர வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்துகள் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம் போல திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்பட்டு சென்றன. வருகிற 30-ந் தேதிவரை இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும். தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள் ளனர். திருச்சி மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக்கழிப்பிட வசதி, ஒலி பெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன.

English summary
trichy: diwali buses operates from temporary bus stand at Mannarpuram roundana
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X