திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி.. காதலன், நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள்
திருச்சி: திருச்சியில் திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண், தனது காதலனுடன் அறை எடுத்து லாட்ஜில் தங்கிஉள்ளார். அங்கு போதை ஊசி செலுத்திய நிலையில் யாஷ்மின் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் இளம்பெண் அவரது காதலன் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை பபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் என்பவருடைய மகன் சதாம் உசேனுக்கு 19 வயது ஆகிறது. இவர் அரியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் ஆசாத் மகளான 19 வயதாகும் யாஸ்மின் என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 7ம் தேதி திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

ஜூன் 8ம் தேதியான நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனே சதாம் உசேன் தனது நண்பர் ஷேக் அப்துல்லா (19) என்பவரது உதவியுடன் யாஸ்மினை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், காதலனை நம்பி வந்த யாஸ்மினுக்கு, அவரது காதலன் சதாம் உசேன், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் சேர்ந்து 'டெபன்டாடல்' என்ற போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தியதும், இதில் அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக யாஷ்மின் இறந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் விடுதி அறையில் இருந்து யாஸ்மினுக்கு பயன்படுத்தப்பட்ட போதை மாத்திரை அட்டை மற்றும் ஊசி ஆகியவற்றையும் கைப்பற்றினர். இதில் டெபன்டாடல் தலா 10 மாத்திரை கொண்ட 7 அட்டைகள், ஊசி-1, மாத்திரை கலக்கிய நிலையில் 2 டீ கப், சிகரெட் துண்டு 3, ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக யாஸ்மினின் காதலன் சதாம் உசேன், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி
திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 19), அவரது காதலி யாஸ்மின் (18), சதாம் உசேனின் நண்பர் ஷேக் அப்துல்லா (19) ஆகியோர் அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் மாலை யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை மற்ற 2 பேரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்து, ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு யாஸ்மினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் யாஸ்மினுக்கு 'டெபன்டாடோல்' என்ற போதை மருந்தை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தியதால் அவர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 7 போதை மாத்திரை அட்டைகள், நீரில் கலக்கிய நிலையில் 2 டீ கப் போதை மருந்து, ஊசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சதாம் உசேனையும், ஷேக் அப்துல்லாவையும் கண்டோன்மெண்ட் போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
இதற்கிடையே போதை மாத்திரைகள் விற்பனை பற்றியும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஷகிலா பேகம், அவரது மகன் ஜாகீர் உசேன் ஆகியோர் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக அரியமங்கலம் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். இறந்துபோன யாஸ்மினும் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்தது யார்? என்பது பற்றியும், அந்த கும்பலுடன் இவர்களுக்கு இருந்த தொடர்பு பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சியில் வீட்டை விட்டு ஓடி.. லாட்ஜில் காதலனை நம்பி தங்கிய இளம்பெண் .. ஆடிப்போக வைத்த கோலம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு














Click it and Unblock the Notifications