திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி.. காதலன், நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண், தனது காதலனுடன் அறை எடுத்து லாட்ஜில் தங்கிஉள்ளார். அங்கு போதை ஊசி செலுத்திய நிலையில் யாஷ்மின் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் இளம்பெண் அவரது காதலன் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை பபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் என்பவருடைய மகன் சதாம் உசேனுக்கு 19 வயது ஆகிறது. இவர் அரியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் ஆசாத் மகளான 19 வயதாகும் யாஸ்மின் என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 7ம் தேதி திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

Girlfriend Dies

ஜூன் 8ம் தேதியான நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனே சதாம் உசேன் தனது நண்பர் ஷேக் அப்துல்லா (19) என்பவரது உதவியுடன் யாஸ்மினை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், காதலனை நம்பி வந்த யாஸ்மினுக்கு, அவரது காதலன் சதாம் உசேன், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் சேர்ந்து 'டெபன்டாடல்' என்ற போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தியதும், இதில் அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக யாஷ்மின் இறந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் விடுதி அறையில் இருந்து யாஸ்மினுக்கு பயன்படுத்தப்பட்ட போதை மாத்திரை அட்டை மற்றும் ஊசி ஆகியவற்றையும் கைப்பற்றினர். இதில் டெபன்டாடல் தலா 10 மாத்திரை கொண்ட 7 அட்டைகள், ஊசி-1, மாத்திரை கலக்கிய நிலையில் 2 டீ கப், சிகரெட் துண்டு 3, ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக யாஸ்மினின் காதலன் சதாம் உசேன், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 19), அவரது காதலி யாஸ்மின் (18), சதாம் உசேனின் நண்பர் ஷேக் அப்துல்லா (19) ஆகியோர் அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் மாலை யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை மற்ற 2 பேரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்து, ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு யாஸ்மினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் யாஸ்மினுக்கு 'டெபன்டாடோல்' என்ற போதை மருந்தை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தியதால் அவர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 7 போதை மாத்திரை அட்டைகள், நீரில் கலக்கிய நிலையில் 2 டீ கப் போதை மருந்து, ஊசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சதாம் உசேனையும், ஷேக் அப்துல்லாவையும் கண்டோன்மெண்ட் போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

இதற்கிடையே போதை மாத்திரைகள் விற்பனை பற்றியும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஷகிலா பேகம், அவரது மகன் ஜாகீர் உசேன் ஆகியோர் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக அரியமங்கலம் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். இறந்துபோன யாஸ்மினும் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்தது யார்? என்பது பற்றியும், அந்த கும்பலுடன் இவர்களுக்கு இருந்த தொடர்பு பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+