கொட்டி தீர்த்த கனமழை... நிரம்பிய ஏரிகள்.... வெள்ளக்காடான திருச்சி!
திருச்சி: புரேவி புயல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சியிலும் நேற்று முன்தினம் தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், தில்லைநகா், அண்ணாநகா், உழவா் சந்தை, கண்டோன்மென்ட், உறையூா் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
உறையூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பளளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் பசுமாடு தவறி விழுந்து இறந்தது. மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். திருச்சி புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. சமயபுரம், மண்ணச்சநல்லூர், சிறுகனூர், எதுமலை, துறையூர் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் குட்டைபோல மழைநீர் தேங்கி நின்றது. இதனை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். தா.பேட்டை அருகே துலையாநத்தம் புதுகாலனியில் ருக்மணி (வயது 80). என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் மழையால் இடிந்து விழுந்தது. அவருக்கு அரசு சார்பில் இலவச சேலை, அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் வழங்கினர்.
இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டாலும், குளங்கள், ஏரிகள் நிரம்பி வருவது திருச்சி மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறதுதிருச்சி ஜங்ஷன்- 33மி.மீ, திருச்சி மாநகரம் 33மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 540 மி.மீ. மழை பதிவானது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications