கொட்டி தீர்த்த கனமழை... நிரம்பிய ஏரிகள்.... வெள்ளக்காடான திருச்சி!
திருச்சி: புரேவி புயல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சியிலும் நேற்று முன்தினம் தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், தில்லைநகா், அண்ணாநகா், உழவா் சந்தை, கண்டோன்மென்ட், உறையூா் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
உறையூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பளளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் பசுமாடு தவறி விழுந்து இறந்தது. மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். திருச்சி புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. சமயபுரம், மண்ணச்சநல்லூர், சிறுகனூர், எதுமலை, துறையூர் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் குட்டைபோல மழைநீர் தேங்கி நின்றது. இதனை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். தா.பேட்டை அருகே துலையாநத்தம் புதுகாலனியில் ருக்மணி (வயது 80). என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் மழையால் இடிந்து விழுந்தது. அவருக்கு அரசு சார்பில் இலவச சேலை, அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் வழங்கினர்.
இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டாலும், குளங்கள், ஏரிகள் நிரம்பி வருவது திருச்சி மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறதுதிருச்சி ஜங்ஷன்- 33மி.மீ, திருச்சி மாநகரம் 33மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 540 மி.மீ. மழை பதிவானது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications