கிராமப்புறங்களை பார்த்தால் எப்படி இருக்குது சார்? அரசுக்கு அவப்பெயரை தேடித் தருகிறதா மின்வாரியம்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பல கிராமங்களில் அறிவித்ததை விட இரண்டரை மணி நேரம் கூடுதலாக மின் தடை ஏற்படுத்தப்பட்டது மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதித்ததாக புகார் எழுந்துள்ளது.

மின்சாரம் வருவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் தாமதமாகியிருந்தாலும் சாலை மறியல் நடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கும். மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமையான இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.அன்புச்செல்வன் முறைப்படி முன்கூட்டியே நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

Is the TNEB bringing disrepute to the government?

பிறகென்ன ஷட் அவுன் குறித்த அறிவிப்பு தான் தெரிவிக்கப்பட்டுவிட்டதே, பிறகென்ன பிரச்சனை என்ற கேள்வி எழலாம். காலை 9.45 முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.அன்புச்செல்வன் தெரிவித்திருக்கிறார். 3 மணிக்கு கரண்ட் வந்துவிடும் எனக் கூறிவிட்டு 5.30 மணிக்கு, அதுவும் பொதுமக்கள் போன் மேல் போன் போட்டு கோபத்தை கொட்டத் தொடங்கிய பிறகு மின் விநியோகம் தரப்பட்டது தான் இங்கு குறிப்பிடத்தக்கது.

இளங்காகுறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாதாயக்கன்பட்டி, எ.இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூர், தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, ஆவாரம்பட்டி, குரும்பபட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டிபட்டி, கூவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி மேலக்கல், புறந்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், கனத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப் பட்டி, முகவனூர், சின்ன அணைக் கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, பொன்னியாறு அணை, என பல கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிகுள்ளாகி உள்ளனர்.

இதேபோல் நகர்ப்புறங்களில் மின் வாரிய அலுவலர்களால் சாவகாசமாக மின் விநியோகம் செய்ய முடியுமா என்பது மேற்கண்ட கிராமமக்களின் கேள்வியாக உள்ளது. நகர்ப்புறங்களில் சொன்ன நேரத்தை விட மின்சாரம் வருவதற்கு 15 நிமிடம் தாமதமானாலும் பெரும் பிரளயமே உருவாகிவிடும். மின் வாரியத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு சில மின் வாரிய அலுவலர்களால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே இந்தப் புகார் பற்றி விளக்கமறிய மணப்பாறை டி.இ.யை தொடர்பு கொண்டோம். மீட்டிங்கில் இருப்பதாக குறுந்தகவல் அனுப்பிவிட்டு கடைசி வரை விளக்கம் தரவில்லை. அதேபோல் ஏ.இ.யிடம் விளக்கம் கேட்ட போது, ''டேமேஜ் போல் மாற்றினோம், இன்னைக்கு ஒரு பொழுது கொஞ்சம் லேட் ஆகிடுச்சு சார்'' எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+