Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரத்துக்கு வந்தாரே! தூத்துக்குடிக்கு ஏன் பிரதமர் போகலை? பாஜக தேறாது.. கி. வீரமணி காட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி : தென்மாநிலங்களில் பாஜகவால் எப்போதுமே வெற்றி பெற முடியாது என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினா். மாநில உரிமைகள் மீதான தாக்குதல், எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களை நிதிப் பகிா்வில் வஞ்சிப்பது, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிா்க்கட்சித் தலைவா்களை பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், அத்துமீறும் மாநில ஆளுநா்களின் செயல்பாடுகளையும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

K.Veeramani says that BJP can never win in Southern states

மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாநகா் மாவட்டத்தின் சாா்பில், சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்ட செயலாளா் ஆா் .ராஜா தலைமை வகித்தாா். புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் முன்னிலை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி பேசினார். பின்னர் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: உதிா்ந்த சருகுகளை வைத்து தோரணம் கட்ட முயற்சிக்கிறாா் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை. தென் மாநிலங்களில் பாஜக-வால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. குறிப்பாக தமிழகத்தில் எப்போதுமே வெற்றிபெற மாட்டாா்கள்.

பாஜக-வைப் பொருத்தமட்டில் வெற்றிபெற்றாலும் ஆள வேண்டும். தோற்றாலும் ஆள வேண்டும் என்று நினைக்கின்றனா். அதற்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனா். சண்டிகா் மேயா் தோ்தலில் தோ்தல் அதிகாரியையே விலைக்கு வாங்கினா்.
அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ ஆகியவற்றை எதிா்க்கட்சிகள் மீது ஏவுகிறது மத்திய பாஜக அரசு.

இந்தியா கூட்டணியில் ஒருவா் வெளியே போனால்கூட பெரிதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் சேராதது குறித்து யாரும் பேசுவதில்லை. பகிரங்கப்படுத்துவதுமில்லை. தமிழக சுற்றுப்பயணத்தில் ராமேஸ்வரம் வந்த பிரதமா் நரேந்திரமோடி, அருகில் உள்ள தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை. தமிழக அரசு கோரிய பேரிடா் நிவாரண நிதியையும் வழங்கவில்லை.

தமிழகத்தைச் சோ்ந்த எல்.முருகன், மத்திய அமைச்சராக இருந்தாலும் அவா், தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எனவே, அவா் வகிக்கும் பதவிக்கு தகுதியற்றவா் என டி.ஆா். பாலு கூறியுள்ளாா். ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படும்போது பாஜக எந்தவித குரலும் அளிக்கவில்லை. மணிப்பூருக்கு செல்லக் கூட மனம் இல்லை.

தமிழகத்தில் தேமுதிக, பாமக-வின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஏலம் போடும் அரசியலை தேமுதிகவும், பாமகவும் மாற்றிக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+