"சார்.. எங்க அம்மாவை காணோம்.. அண்ணனையும் காணோம்".. கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த ஆட்டுக்குட்டி!
திருச்சி: "கலெக்டர் சார்.. என் அம்மாவையும் காணோம்... என் அண்ணனையும் காணோம்.. எப்படியாச்சும் கண்டுபிடிச்சு தாங்க" என்று ஒரு ஆட்டுக்குட்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளது!
Recommended Video
திருச்சி மாவட்டம், உறையூர் காசிசெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்... இவர் ஒரு விவசாயி.. 3 ஆடுகளை இவர் வளர்த்து வந்துள்ளார்.

ஆனால் சில தினங்களுக்கு முன்பு யாரோ ராத்திரி நேரத்தில் வந்து 2 ஆடுகளை திருடி சென்றுவிட்டனராம்.. இதுதொடர்பாக, உறையூர் போலீஸ் ஸ்டேஷனில் சரவணகுமார் புகார் அளித்துள்ளார்.. ஆனால் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
தனது மனு மீதான நடவடிக்கை தொடர்பாக ஆன்-லைன் மூலமும் சரவணகுமார் சரி பார்த்துள்ளார்.. அப்போதும் எந்த முன்னேற்றமில்லை என்றுதான் இவருக்கு பதில் கிடைத்துள்ளது. அதனால் திரும்பவும் காணாமல் போன ஆடுகள் குறித்து ஒரு மனு தந்தார்.. ஆனால், அந்த புகாரின்பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படாமல், மனு நிலுவையிலேயே உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்த நாமளா போய் மனு தந்தால் வேலைக்கு ஆகாது என்று சரவணகுமார் நினைத்தார்.. அதேசமயம், திருடுபோன ஆடுகளும் கிடைக்க வேண்டும் என்று நூதனமாக ஒரு ஐடியா செய்தார்.. அதன்படி தன்னுடைய ஆட்டுக்குட்டியின் கழுத்தில் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு எழுதி தொங்கவிட்டார்.. ஒரு போர்டில் "என் அம்மாவையும், அண்ணனையும் மீட்டுத்தாருங்கள்" என்று எழுதி, அதைதான் ஆட்டுக்குட்டி கழுத்தில் தொங்கவிட்டார்.
அந்த ஆட்டுக்குட்டி வெள்ளை கலரில் பார்ப்பதற்கே கியூட்-ஆக இருந்தது. கழுத்தில் போர்டு தொங்க, ஆட்டுக்குட்டியை சரவணகுமார் தூக்கி கொண்டு திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார். அங்கு ஏற்கனவே மனு கொடுக்க நிறைய பேர் வரிசையில் நின்றிருந்தனர்.. ஆட்டுக்குட்டியுடன் அந்த வரிசையில் வந்து நின்றார் சரவணகுமார்.
இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. விரைவில் ஆட்டுக்குட்டிக்கு அதன் அம்மாவும், அண்ணனும் கிடைத்துவிடுவார்கள் என்றே நம்புவோம்!!
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications