ஊரடங்கு மீறல்: மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் நிரம்பி வழியும் பைக்குகள்.. போலீசார் அதிரடி!

மணப்பாறையில் 400 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் 400க்கும் மேற்பட்ட பைக்குகள் நிரம்பி வழிகின்றன.. இதற்கு காரணம் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் ரோட்டில் சுற்றி வரும் நபர்களை வளைத்து பிடித்து, அவர்களது பைக்குகளைதான் பறிமுதல் செய்து வைத்துள்ளனர் போலீசார்!!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வாகனங்களில் செல்ல போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் பல இடங்களில் இந்த விதி மீறப்பட்டு வருகிறது... அவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

lockdown: curfew violation confiscation of bikes near trichy

முதலில் கண்டித்து பார்த்தனர்.. பிறகு தோப்புக்கரணம் உள்ளிட்ட நூதன தண்டனை தந்தனர்.. அப்போதும் சிலர் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றியதால் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.,. அந்த வகையில் மணப்பாறை, அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் பலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பைக்கில் வலம் வந்தபடி இருந்தனர்.

இவர்கள் மீதுதான் மணப்பாறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது... வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவர்கள் ஓட்டி வந்த பைக்குகளையும் பறிமுதல் செய்து மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வருகிறார்கள். இதில் மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் மட்டும் 630-க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி புத்தாநத்தம், வையம்பட்டி, துவரங்குறிச்சி, வளநாடு ஆகிய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் 400-க்கும் மேற்பட்ட பைக் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணப்பாறை போலீஸ் நிலைய வளாகத்தில் பைக்குகளின் அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+