Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி மேயர் ஆகிறார் மு.அன்பழகன்! துணை மேயர் பதவிக்கு திமுகவில் இருமுனைப் போட்டி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான மு.அன்பழகனுகு திருச்சி மாநகராட்சி மேயர் பதவி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாநகராட்சி வரலாற்றில் தொடர்ந்து 5 முறை மாநகராட்சி கவுன்சிலராக வெற்றிபெற்றவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் மு.அன்பழகன்.

இதனிடையே திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு மதிவாணன் மற்றும் விஜயா ஜெயராஜ் இடையே கடும் போட்டி உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி 27-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மு.அன்பழகன், இதற்கு முன் இரண்டு முறை துணை மேயராக இருந்திருக்கிறார். 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சி நடைபெற்றபோது துணை மேயர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையை தோற்கடித்து துணை மேயர் பதவியை கைப்பற்றினார். அதேபோல் 2006 -2011 காலகட்டத்திலும் திருச்சி மாநகராட்சி துணை மேயராக அன்பழகன் பதவி வகித்திருக்கிறார்.

 5 முறை வெற்றி

5 முறை வெற்றி

இரண்டு முறை துணை மேயர், 5 முறை தொடர்ச்சியாக மாமன்ற உறுப்பினராக இருந்த இவருக்கு இந்த முறை திருச்சி மேயர் பதவி உறுதியாகியுள்ளது. இதனால் பதவியேற்பு விழாவுக்கான உற்சாகத்துடன் வலம் வருகிறார் மு.அன்பழகன். அமைச்சர் கே.என்.நேருவின் மிகத் தீவிர ஆதரவாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்து வருகிறார். இவருக்கு எதுவுமே செய்யமுடியவில்லையே என்ற வருத்தப்பட்ட அமைச்சர் நேரு, இப்போது மேயர் என்ற அந்தஸ்தை வழங்கவுள்ளார்.

 துணை மேயர்

துணை மேயர்

எல்லா மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்கு தான் கடும் போட்டியிருக்கும். ஆனால் திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளரும் மலைக்கோட்டை பகுதிச்செயலாளருமான மதிவாணனுக்கு துணை மேயர் பதவிக்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அதேவேளையில் விஜயா ஜெயராஜும் துணை மேயர் பதவிக்கான ரேஸில் இருப்பதால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

காங்கிரஸ் விருப்பம்

காங்கிரஸ் விருப்பம்

இதனிடையே திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயராக இருந்த சுஜாதா, துணை மேயர் பதவிக்கு காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வசம் இருப்பதால் மாநகராட்சி விவகாரத்தில் எந்த முக்கியப் பதவியும் திமுக தரப்பில் கொடுக்கப்படாது என்ற தகவலும் கசிந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+