“மோடி பிரச்சாரத்துக்கு வரும் நாளில் அதிசயங்கள் நடக்கும்”.. பொடி வைத்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும்போது, மேடையில் அவருடன் யார் யார் இருப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும். அதிசயங்கள் நடக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக, அமமுக, பாமக (அன்புமணி) தமாகா, தமமுக, ஐஜேகே என கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது. இது அதிமுக கூட்டணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் "திமுகவின் இடைக்கால பட்ஜெட் என்பது வெங்காயத்தை உரித்தால் எப்படி இருக்குமோ அதுபோல ஒன்றும் இருக்காது." என்றார்.
மேலும் பேசிய அவர், திமுகவின் எதிர்ப்பு மற்றும் எங்களது கூட்டணியின் பலம் பற்றியும் எடுத்துரைத்து தேர்தலை சந்திப்போம். வைகோ அப்பிராணி. அவர் பாவம். வயது முதிர்ந்தவர். அவரை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் விஜய்யின் சக்தி என்ன என்பது தெரியவரும். விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.
தேர்தல் பரபரப்பில் அனைவரும் இருக்கும் நிலையில் அமெரிக்க மாடலில் மக்களை சந்திக்காமல் டி.வியில் பிரச்சாரம் செய்யப் போகிறார் போல. அங்கெல்லாம் இதுபோலதான் செய்கிறார்கள். என்ன ஐடியாவில் இருக்கிறார் என்று தெரியவில்லை.
5000 ரூபாய் வழங்குவது என்பது நமது பணத்தை தான் அவர்கள் தருகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். விலைவாசி உயர்வு மின்சார உயர்வு என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. இந்த ஆட்சி தொடர்ந்தால் சரி இருக்காது என மக்கள் எண்ணுகிறார்கள்.
'ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும்' என்ற திமுகவின் பிரச்சாரம் போல 'எடப்பாடி வெல்லட்டும் தமிழக முன்னேறட்டும்' என்ற பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுப்போம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு. தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது சரியாக வராது என்று திமுக தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும் சொல்லிவிட்டார்கள்.
பாஜக, அதிக சீட்டுகள் கேட்பது குறித்து இன்னும் பேசவில்லை. பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தேர்தல் அறிவிக்க இன்னும் நாட்கள் உள்ளன. பிரதமர் வருவது என்பது பிரச்சாரத்திற்காக. மேடையில் அவர் ஏறும்போது தான் யார் இருப்பார்கள் என்று தெரியும். அதிசயங்கள் நடக்கும்" எனத் தெரிவித்தார். பிரதமர் மோடி வரும் மார்ச் 1 ஆம் தேதி மதுரைக்கு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தர உள்ளார்.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கட்சி ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு ஆதரவளிப்பீர்களா? என்ற கேள்விக்கு "அவர் கட்சி ஆரம்பிப்பாரா என்பது தெரியாது. அவர் ஆரம்பித்த பிறகு நீங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் கூறலாம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "அவர்களே கூறி விட்டார்கள். யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்கே போக வேண்டுமோ, போவோம் என்றார்கள். போய்விட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications