நடுராத்திரி 12 மணி.. லோக்சபாவில் இந்தி திணிப்பிற்கு எதிராக பொங்கிய நவாஸ்கனி எம்பி.. என்ன பேசினார்?
திருச்சி: இந்தி திணிப்பிற்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க கோரியும் நவாஸ்கனி எம்பி லோக்சபாவில் வலியுறுத்தினார்.
நேற்றைய நாடாளுமன்ற லோக்சபா நள்ளிரவு வரை நடைபெற்றது.அதில் நள்ளிரவு 12:15 மணியளவில் தமிழகம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நாடாளுமன்ற கொறடாவுமான நவாஸ்கனி எம்பி உரையாற்றியபோது, "ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும், ஓமன் நாட்டில் தூதரகம் சார்பாக நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ் மொழியை சேர்க்கவும் வலியுறுத்தினார்.
அவர் ஆற்றிய உரை பின்வருமாறு. இந்த நள்ளிரவு நேரத்திலும் அவையை நடத்தி நள்ளிரவு 12.15 மணிக்கு வாய்ப்பளித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழி தமிழ்
1949 களிலேயே ஆட்சி மொழி குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்தபோது, இந்திய அரசியல் நிர்ணய சபையில், பன்முகத்தன்மை கொண்ட இந்திய தாய்த் திருநாட்டில் ஒரு மொழி ஆட்சி மொழியாக அமையும் என்றால் அது எம் தாய்மொழி தமிழே என்று ஓங்கி முழங்கிய கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உறுப்பினராக ஒரு முக்கிய பிரச்சினையை இந்த சபைக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

அனைவருக்கும் சம உரிமை
தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக பல்வேறு தளங்களில், மக்கள் எதிர்த்து வருகின்றார்கள். அதிலும் தற்போதைய புதிய கல்விக் கொள்கை மொழித் திணிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தமிழகக் கல்வியாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே எத்தகைய மொழியையும் திணிக்கக்கூடாது, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம்
அதிலும் பல நூற்றாண்டுகள் கடந்து இலக்கிய, இலக்கணத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் தாய்மொழி தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவேண்டும்.
யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், இதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களின் விருப்பம் இல்லாது எந்த ஒரு மொழியையும் திணிப்பது கண்டிக்கத்தக்கது.

பிரதமரின் உரை
நம்முடைய பிரதமரின் உரைகளில் மட்டும் தமிழ் மொழியின் மேன்மையும், பெருமையும் கலந்து இருக்கின்றது ஆனால் செயல்பாடுகளில் அத்தகையது இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.ஏனென்றால் சமஸ்கிருதத்திற்கு வழங்கப்படும் நிதியை காட்டிலும் தமிழுக்கு வழங்கப்படும் நிதி குறைவு என்பது அதனை பிரதிபலிக்கின்றது. எனவே மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் கல்வி வேண்டும்
ஓமன் நாட்டில் இந்திய தூதரகத்தின் சார்பாக செயல்படக்கூடிய பள்ளியில் தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்கப்படவில்லை, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுவதுபோல தமிழ்வழிக் கல்வியும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அங்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழ் கற்கக்கூடிய வாய்ப்பு இல்லை. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு வசித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை செய்பவர்களாக, தொழில் நிமித்தமாக அங்கேயே வசித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாயகம் திரும்பும் போதும், தொடர்ந்து தமிழ்வழிக் கல்வியே படிப்பதற்கு,அங்கேயும் தமிழ்வழிக் கல்வியை படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications