தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்வு
திருச்சி: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 692 ஆக உயர்ந்துள்ளது. இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார். நேற்று மட்டும் 8 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை சீராக உள்ளது.
அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த கணவன் மனைவி இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சென்னையை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications