Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாரியம்மா நீயே கேளும்மா! கையில் காசு.. கண்ணுல சாமி! சமயபுரம் கோவிலில் புரோக்கர்கள் அட்ராசிட்டி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: புகழ்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இடைத் தரகர்கள் ஆதிக்கம் இருப்பதாகவும், சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களிடம் பேரம் பேசி பணம் பறிப்பதாக அதிர்ச்சி தரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது..

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. திருச்சி காவிரி கரை ஓரமாக உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்து பெற்றதாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகின்றனர்.

trichy samayapuram mariamman temple

மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை இலட்சக்கணக்கை தொடும். மேலும் குழந்தைகளின் உடல் நலன், குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்:

இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் காரணமாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதை பயன்படுத்தியும் வெளி மாநில சபரிமலை ஐயப்ப பக்தர்களை குறி வைத்தும் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

trichy samayapuram mariamman temple

ஐயப்ப பக்தர்கள்:

சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபம் மற்றும் சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்வதாக கூறி அவர்களிடம் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் தான் இவர்களது குறி. சுவாமி தரிசனத்திற்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் என பேரம் பேசி தொல்லை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சிறப்பு தரிசனம்:

மேலும் இடைத்தரகர்களுக்கு கோவில் காவலர்கள், அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களை குறி வைத்து அவர்களை மடக்கி 200 ரூபாய் கொடுத்தால் நேரடியாக சுவாமி தரிசனம் அழைத்துச் செல்வதாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

trichy samayapuram mariamman temple

பணம் கேட்டு தொல்லை:

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் மோசடியின் பின்னணியில் கோவிலில் இருக்கும் அறநிலைய அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மன நிம்மதிக்காக கோவிலுக்கு வரும் பக்தர்களை குறி வைத்து பணம் கேட்டு தொந்தரவு செய்யும் நபர்களால் கோவிலுக்கு வரும் எண்ணமே போய்விடுகிறது என கூறும் பொது மக்கள் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உயிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்து சமய அறநிலையத் துறை:

மேலும், மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள கோயில்களில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சிறப்பு தரிசனம், கோவில் சார்பில் மரியாதை உள்ளிட்டவை அளிக்கக் கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் எப்படி இவர்கள் பணம் பறிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+