பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மார்ச் 28 வரை முக்கிய மாற்றம்
திருச்சி: மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மயிலாடுதுறை-திண்டுக்கல் பயணிகள் ரயில் (56821/56822) திருச்சி-திண்டுக்கல்-திருச்சி இடையேயும், திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரயில் (56829 / 56830) மானாமதுரை-ராமேசுவரம்-மானாமதுரை வரை மார்ச் 28 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருநெல்வேலி-திண்டுக்கல்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56826/56822) மயிலாடுதுறை-திண்டுக்கல்-திருநெல்வேலி பயணிகள் ரயில் (56821/56825) விருதுநகா்- திருநெல்வேலி -விருதுநகா் வரையில் மார்ச் 22 முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
அதுபோல், திருநெல்வேலி-ஜம்மு விரைவு ரயில் (16787) 50 நிமிஷங்கள் தாமதமாக மார்ச் 20, 23, 27 ஆகிய நாள்களில் வந்தடையும். கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரயில் 4 மணி நேரம் தாமதமாக மார்ச் 24 ஆம் தேதி திருச்சியை வந்தடையும். கன்னியாகுமரி-ஹவுரா விரைவு ரயில் (12666) மார்ச் 28 ஆம் தேதி 1.55 மணி நேரம் தாமதமாக திருச்சியை வந்தடையும். அதுபோல், திண்டுக்கல்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56822) மார்ச் 17, 19, 21 ஆகிய நாள்களில் 2.15 மணி நேரம் தாமதமாக திருச்சியிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
மேலும், காரைக்குடியிலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் காரைக்குடி-திருச்சி டெமு பயணிகள் ரயில் (76840) மார்ச் 28 ஆம் தேதி 70 நிமிஷங்கள் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 1 மணிக்கு திருச்சியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications