திருச்சியில் ரயில் நிலைய வளாகத்திலிருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்.. பக்தர்கள் அதிர்ச்சி
திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் அமைந்திருந்த தேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். சம்பவத்தின் போது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்திருந்தது. ரயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சேர்ந்து இக்கோவிலை அமைத்திருந்தனர். அதன்பிறகு ஒரு அமைப்பாக சேர்ந்து கோவிலை நிர்வகித்து வந்தனர்.

ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளும், பொதுமக்களும் அங்குள்ள ஆட்டோ நிறுத்த டிரைவர்களும் இக்கோவிலில் வழிபாடு நடத்துவது உண்டு. ஆண்டு தோறும் திருவிழாக்களும் பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகளும் இக்கோயிலில் நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ரயில் நிலைய வளாகத்தில் அமைந்திருந்ததால் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது.
இந்நிலையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.30 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. நடைபாதை மேற்கூரை ரயில் நிலைய நுழைவு வாயில் வரை நீட்டிப்பு, கூடுதல் நுழைவு பாதையில் பஸ்கள் வந்து செல்ல வசதி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ரயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், அதனை அகற்றிடவும், அந்த இடத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள், கோவில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள் கோவிலை இடிக்க வேண்டாம் என திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்த ரயில்வே அதிகாரிகள் நேற்று கோவிலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் என ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். கோவிலில் உள்ள மூலவர் அம்மன் சிலை, விநாயகர், நாகம்மாள் உள்பட 13 சிலைகள் அகற்றப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பின் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலை இடித்து அகற்றும் பணி நடந்தது.
கோவில் சுற்றுச்சுவர் உள்பட அனைத்தும் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அந்த இடமே தற்போது வெறிச்சோடி உள்ளது. இதனால் பக்தர்கள் கடும் வேதனை அடைந்தனர். போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்ததால் யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல் தவித்தனர். பக்தர்கள் கூறுகையில், "கோவிலை இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில் என்ன மேம்பாட்டு பணி நடைபெற போகிறதோ தெரியவில்லை என வேதனைப்பட்டனர்
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications