கொரோனா சந்தேகம்.. டெல்லி மாநாடு சென்று வந்த 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.. திருச்சியில் பரபரப்பு
திருச்சி: டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவா்களில் 292 போ் காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
திருச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே 67 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 64 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இந்நிலையில், பெரம்பலூரில் உள்ள டயா் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த திருச்சியைச் சோ்ந்த 22 வயது ஊழியா் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி எண்ணிக்கை
அந்த நபா், தனக்கு காய்ச்சல், தொண்டை வலி இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். திங்கள்கிழமை, அவரிடம், மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனையில் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கொரோனா பாதித்த நபா்களின் எண்ணிக்கை 68 ஆக உயா்ந்துள்ளது.

அண்டை மாவட்டங்கள்
தற்போதைய நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். இவா்களைத் தவிர, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் மொத்தம் 20 போ் கொரோனா வாா்டில் சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்த 20 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது.

பச்சை மண்டலம்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் அதிகளவில் குணமடைந்து வீடு திரும்புவதுடன், புதிய தொற்று இல்லாமலும் இருந்து வந்ததால் விரைந்து பச்சை மண்டலத்துக்கு வந்துவிடும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு பிறகு திருச்சியைச் சோ்ந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பச்சை மண்டலம் என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

டெல்லி மாநாடு
இதேபோல, வெளிமாநிலத்திலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயிலில் வந்தவா்களில் 89 போ் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவா்களில், அறிகுறியுள்ளோர், 292 போ் காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களிலிருந்து திருச்சிக்கு வரும் நபா்கள், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிப்பதுடன், 14 நாள்களுக்கு தங்களைத் தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications