முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. உடனே களமிறங்கிய அன்பில் மகேஷ்.. நெகிழ்ந்து போன இலங்கை தமிழர்கள்!
திருச்சி: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் திருச்சியில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களே நேரில் வந்து குறைகளை கேட்டதால் இலங்கை தமிழர் அகதிகள் நெகிழ்ந்து போனார்கள்.
தமிழ்நாட்டில் திருச்சி, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கை அகதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிதி
இதனால் தங்களுக்கு உதவும்படி இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் குரலை கேட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். இலங்கை அகதிகள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.

ஆய்வு செய்தனர்
மேலும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அதிகள் முகாமில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்யும்படி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அடிப்படை வசதிகள் உள்ளதா?
திருச்சி வாழவந்தான்கோட்டை மற்றும் கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டனர். அங்குள்ள குடியிருப்புகள், கழிப்பறைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.4,000 கொரோனா உதவி தொகையும் அங்குள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது.

குறைகளை கேட்டறிந்தனர்
இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் ஆகியோர் இலங்கை தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களே நேரில் வந்து குறைகளை கேட்டதால் இலங்கை தமிழர் அகதிகள் நெகிழ்ந்து போனார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications