பருவ மழையை வரவேற்க தடபுடலாக தயாராகும் திருச்சி.. 1 லட்சம் மரக்கன்றுகளை நட சபாஷ் திட்டம்!
திருச்சி: திருச்சி மாநகரில் பருவமழைக் காலத்துக்கு முன்பே 1 லட்சம் மரக்கன்றுகளை நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இந்திய அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு(கிரடாய்) திருச்சி கிளையின் இளைஞர் பிரிவு தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கட்டுமானத்துறையில் கிரடாய் அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது.

அதுமிட்டுமின்றி முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை புகுத்தக்கூடிய வகையில் கட்டுமானத் துறையை கொண்டு செல்ல வேண்டும். மேலும் சமூகப்பணிகள் மீதான அக்கறையும் அதிகரிக்க வேண்டும். இந்த அமைப்பு ஏழை மக்களின் மனிதாபிமான அமைப்பாக செயல்பட வேண்டும். புல்வாமா தாக்குலில் பலியான குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருவதன் மூலம் தேசபக்தி கொண்ட அமைப்பாகவும் மாறிவிட்டது.
இனிவரும் காலங்களில் புதிதாக கட்டப்படும் வீடுகள் பசுமை, மழைநீர் சேகரிப்பு, குப்பை சேகரிப்பு மையங்கள் கொண்டிருப்பது போன்று இருக்கும் வகையில்வடிவமைப்பை ஏற்படுத்த வேண்டும். புதை சாக்கடைத் திட்டம் ரூ. 650 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் முடிவடைந்தவுடன் 90 சதவிகிதப் பகுதிகளுக்கு புதை சாக்கடை வசதி கிடைத்துவிடும்.
பருவமழை காலத்திற்கு முன்னதாக 1 லட்சம் மரக்கன்றுகளை நடத்திட்டமிட்டுள்ளோம். மேலும் விளையாட்டு மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு கிரடாய் பங்களிப்பு மிக அவசியமானது இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் உயிர் நீத்த அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு வீடு கட்ட ரூ.6 லட்சம் பங்களிப்புத் தொகை திருச்சி கிரடாய் சார்பில் வழங்கப்பட்டது.விழாவுக்கு கிரடாய் திருச்சி கிளைத் தலைவர் ந. ஆனந்த் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிரடாய் தலைவர் வி.கௌதம் கௌரவ விருந்தினராக பங்கேற்று பேசினார்.
துணைத்தலைவர் ஐ.ஷாஜஹான், செயலர் ஆர்.எஸ்.ரவி, பொருளாளர் ஆர். மனோகரன், முன்னாள் தலைவர் பி. செந்தில்குமார், இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் என்.முகமது இப்ராஹிம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications