சமயபுரம் மாரியம்மன் கோயிலில் என்னங்க இதெல்லாம்? குளத்துல அதுபாட்டுக்கு மிதக்குது.. குபுகுபு திருச்சி
திருச்சி: திருச்சி சமயபுரம் கோயிலுக்கு வழிபட வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.. நாளை அமாவாசை வருவதையொட்டி கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டு வரும்நிலையில், இப்படியொரு சம்பவம் கோயிலில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் புகழ்வாய்ந்ததாகும்.. அதனால்தான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகிறார்கள்.

இதனால் சமயபுரம் கோவிலில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கும்.. இந்த கோவிலுக்கு உரிய தெப்பக்குளம், கோவிலிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ளது..
கோயில் குளம்: இந்த குழத்தில் ஆழம் அதிகம் என்பார்கள்.. அதனால்தான், பக்தர்களை இந்த குளத்தில் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை.. குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு எச்சரிக்கை பலகையும் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த தெப்பக்குளத்தில் பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்தி, பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனை தரிசிப்பது வழக்கமாகும். இந்த தெப்பக்குளத்தில்தான் தெப்ப உற்சவமும் நடைபெறும்.
போலீசாருக்கு தகவல்: இந்நிலையில் இந்த தெப்பக்குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், உடனடியாக போலீசார் விரைந்து சென்றனர்.. அப்போது காக்கி சட்டை பனியன் அணிந்த, ஆணின் சடலம் மிதந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, தெப்பகுளத்தை சுற்றி சோதனை மேற்கொண்டபோது, உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் இன்னொரு ஒரு ஆணின் சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 2 சடலங்களையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை: ஆனால், இவர்கள் யார் என்று தெரியவில்லை.. குளத்தில் குளிக்க வந்தவர்களா? அல்லது தற்கொலை செய்து கொள்ள வந்தார்களா? கொலையா? என்பது உறுதியாக தெரியவில்லை.. எனவே சமயபுரம் போலீசார் தீவிர விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications