சமயபுரம் மாரியம்மன் கோயிலில் என்னங்க இதெல்லாம்? குளத்துல அதுபாட்டுக்கு மிதக்குது.. குபுகுபு திருச்சி
திருச்சி: திருச்சி சமயபுரம் கோயிலுக்கு வழிபட வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.. நாளை அமாவாசை வருவதையொட்டி கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டு வரும்நிலையில், இப்படியொரு சம்பவம் கோயிலில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் புகழ்வாய்ந்ததாகும்.. அதனால்தான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகிறார்கள்.

இதனால் சமயபுரம் கோவிலில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கும்.. இந்த கோவிலுக்கு உரிய தெப்பக்குளம், கோவிலிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ளது..
கோயில் குளம்: இந்த குழத்தில் ஆழம் அதிகம் என்பார்கள்.. அதனால்தான், பக்தர்களை இந்த குளத்தில் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை.. குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு எச்சரிக்கை பலகையும் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த தெப்பக்குளத்தில் பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்தி, பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனை தரிசிப்பது வழக்கமாகும். இந்த தெப்பக்குளத்தில்தான் தெப்ப உற்சவமும் நடைபெறும்.
போலீசாருக்கு தகவல்: இந்நிலையில் இந்த தெப்பக்குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், உடனடியாக போலீசார் விரைந்து சென்றனர்.. அப்போது காக்கி சட்டை பனியன் அணிந்த, ஆணின் சடலம் மிதந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, தெப்பகுளத்தை சுற்றி சோதனை மேற்கொண்டபோது, உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் இன்னொரு ஒரு ஆணின் சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 2 சடலங்களையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை: ஆனால், இவர்கள் யார் என்று தெரியவில்லை.. குளத்தில் குளிக்க வந்தவர்களா? அல்லது தற்கொலை செய்து கொள்ள வந்தார்களா? கொலையா? என்பது உறுதியாக தெரியவில்லை.. எனவே சமயபுரம் போலீசார் தீவிர விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications