Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி வங்கியின் பார்க்கிங் ஏரியாவில்.. கடனை கட்டாத விவசாயி இருந்த கோலம்.. ஓடி வந்த பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் என்பவர் மணப்பாறையில் உள்ள தனியார் வங்கியில் குழு கடனாக 40,000 கடன் தொகை பெற்றுள்ளார்.இவரை வலுக்கட்டாயமாக வங்கியின் கார் பார்க்கிங் ஏரியாவிற்கு அழைத்து சென்ற வங்கி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அடிதாங்கமால் அலறிய விவசாயியை பொதுமக்கள் ஓடி வந்து மீட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். (56) இவர் மணப்பாறையில் உள்ள தனியார் வங்கியில் குழு கடனாக 40,000 கடன் தொகை பெற்றுள்ளார். இதில், மொத்தம் 24 மாதத்திற்கு 17 மாதம் கடன் தொகை செலுத்தியுள்ளார்.

Trichy What happened to the farmer who didn t pay his loan in the parking area of Trichy Bank

கடன் நிலுவை தொகை

மீதி ஏழு மாதங்களுக்கு பணம் கட்ட தாமதமாகி விட்ட நிலையில் முந்தைய மாதம் முருகேசன் வீட்டுக்கு சென்ற விக்னேஷ் என்ற தனியார் வங்கி ஊழியர் அங்கு இருந்த முருகேசன் மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்களை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன் உங்களிடம் பணம் செலுத்த முடியாது என்றும் வங்கிக்கு சென்று கட்டி விடுகிறேன் என்று கூறினாராம்.

தரக்குறைவாக பேச்சு

அதேபோல், இந்த மாதமும் வீட்டு சென்ற வங்கி ஊழியர் விக்னேஷ், தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் வங்கிக்கு நேராக வரவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். இதனையடுத்து, நீங்கள் முன்னால் செல்லுங்கள் நான் பேருந்தில் வருகிறேன் என்று சொல்லி முருகேசன் மினிபஸ்ஸில் மணப்பாறைக்கு பயணம் செய்திருக்கிறார்.

வங்கி ஊழியர்கள் அதிரடி

அப்பொழுது வங்கி ஊழியர்கள் இரண்டு பேர் மினிபஸ்ஸின் இடதுபுறமும், வலது புறமும் என பேருந்து சைடாக டூவீலரில் பின் தொடர்ந்து பாதுகாவலர் போல் சென்று உள்ளனர். முருகேசன் மணப்பாறையில் இறங்கி தனியார் வங்கிக்கு சென்றபோது அவரை தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் வேன் ஸ்டாண்ட் பின்புறத்தில் அதாவது வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு அவரைப் பிடித்து சென்று சரமாரியாக அடித்தார்களாம்.

பொதுமக்கள் மீட்டனர்

அப்போது வலி தாங்காமல் முருகேசன் கதறி அழுதுள்ளார். இந்த அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பதறியபடி ஓடிச்சென்று வங்கி ஊழியரியரிடமிருந்து முருகேசனை மீட்டுள்ளனர். அப்போது வங்கி ஊழியர் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததுடன் தாக்குதல் நடத்திய வங்கி ஊழியரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தாக்கப்பட்ட விவசாயி முருகேசன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+