கேரளத்தில் அதிக பாதிப்பு.. தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்.. விஜயபாஸ்கா்
திருச்சி: கேரளத்தில் அதிக பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம் என்றும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் 4 பேருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தார்
Recommended Video
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனி வார்டை நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளரிடம் பேசுகையில், "திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவா்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருந்த போதிலும் அவா்கள் அனைவரும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். அந்த வார்டுகளை அரசு சார்பில் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, அங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படும்.
கேரளத்தில் அதிக பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். கொரோனா பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை மையங்கள் திருவாரூா் மற்றும் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு இடங்களில் அமைக்க பட உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதன்மையா் வனிதா, மாவட்டச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications