கேரளத்தில் அதிக பாதிப்பு.. தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்.. விஜயபாஸ்கா்
திருச்சி: கேரளத்தில் அதிக பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம் என்றும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் 4 பேருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தார்
Recommended Video
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனி வார்டை நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளரிடம் பேசுகையில், "திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவா்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருந்த போதிலும் அவா்கள் அனைவரும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். அந்த வார்டுகளை அரசு சார்பில் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, அங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படும்.
கேரளத்தில் அதிக பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். கொரோனா பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை மையங்கள் திருவாரூா் மற்றும் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு இடங்களில் அமைக்க பட உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதன்மையா் வனிதா, மாவட்டச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications