கொள்ளிடம் ஆற்றங்கரை.. கொலுசு.. செருப்பு.. புடவை.. புதர் அருகில் எலும்புக்கூடு.. யார் அந்த பெண்?

கொள்ளிடம் ஆற்றங்கரையில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள புதர் அருகில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.

திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி என்ற கிராமம் உள்ளது... இங்குள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் நாணல் புதரில் ஒரு எலும்புக்கூடு வெளியே நீட்டிக் கொண்டு காணப்பட்டது.

Woman skeleton found near trichy kollidam river

இதை பார்த்து அலறிய மக்கள், திருச்செனம்பூண்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் சொல்ல, அவரோ தோகூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் தடயவியல் நிபுணர்கள் உட்பட பலரும் புதர் பகுதிக்கு வந்தனர்.

அவர்களுடன் தடய அறிவியல் நிபுணர்களும் வந்து அந்த அடையாளம் தெரியாத எலும்புக்கூடை ஆய்வு செய்தனர். அந்த எலும்புக்கூடு பெண்ணுடையது என்றும் 30 முதல் 40 வயது வரை உள்ள பெண்ணாக அவர் இருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. மேலும் எலும்புக்கூடு இருந்த புதர் பகுதியில் அந்த இடத்தில் ஒரு கொலுசு கிடந்தது.. பெண்கள் அணியும் செருப்பு, புடவையின் ஒரு பகுதியும் கிடந்தது.

எலும்புக்கூடாக கிடைத்துள்ளதால், அந்த பெண் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், அவர் யார்? எப்படி இறந்தார் என தெரியவில்லை.. தோகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றங்கரை புதரில் பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+