Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துள்ளும் தூத்துக்குடி.. மின்சார கார் நிறுவனத்துக்கு ஸ்டாலின் அடிக்கல்! ரூ.16,000 கோடியில் பிரமாண்டம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தனியார் மின்சார கார் நிறுவனத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உலக முதலீட்டாளா் மாநாட்டு நடைபெற்றது. இதில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் வியட்னாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற தனியாா் மின்சார காா் தொழிற்சாலை தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்திடப்பட்டது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் வின் ஃபாஸ்ட் காா் உற்பத்தி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

CM Stalin is going to Thoothukudi to inaugurate Vin fast electric car company

தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் அமைந்து இருக்கும் சிப்காட் வளாகத்தில் இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வின் ஃபாஸ்ட் கார் தொழிற்சாலைக்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 408 ஏக்கா் பரப்பளவில் நிலம் தோ்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வியட்னாம் நாட்டு முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.

CM Stalin is going to Thoothukudi to inaugurate Vin fast electric car company

அத்துடன் தூத்துக்குடி நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரத்தில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. சுமாா் 20 ஆயிரம் போ் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

குறிப்பாக நிவாரணத் தொகை, வீடு இடிந்தவா்களுக்கு புதிய வீடு கட்ட நிதி உதவி, புதிய படகு வாங்க மீனவா்களுக்கு நிதியுதவி, மகளிா் சுய உதவிக் குழுவினர், சிறு வணிகா்களுக்கு குறைந்த வட்டியில் கடன் போன்ற உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறாா். முதலமைச்ச மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தென் மாவட்டங்களான குமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ள மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+