தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்ஸிஜன் முழுவதும் தமிழகத்திற்கே!.. ஆட்சியர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கும் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கே என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது விநியோகமும் தொடங்கியுள்ளது. இந்த பணியை ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆக்ஸிஜன் நிரப்பிய முதல் கன்டெய்னர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட்டில் இருந்து புறப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஸ்டெர்லைட்
அப்போது அவர் பேசுகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது. 4.820 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

10 மெட்ரிக் டன்
முதல்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். சில நாட்களில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்திற்கே விநியோகம் செய்யப்பட்டும் என செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை
முன்னதாக ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திரக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அப்போது அந்த நிறுவனத்தை திறக்க கூடாது என முந்தைய அதிமுக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

நிபுணத்துவம்
இதையடுத்து தமிழக அரசே நிபுணத்துவம் வாய்ந்த ஆட்களை வைத்து ஆக்ஸிஜன் தயாரிப்பதாக தமிழக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் பகிர்ந்தளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் இந்த ஆக்ஸிஜன் தமிழகத்திற்கே என ஆட்சியர் கூறியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications