கடம்பூர் பேரூராட்சி தேர்தல்.. முதல் முறையாக கைப்பற்றி அசத்திய திமுக கூட்டணி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில், 9 வார்டுகளுக்கு பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடம்பூர் பேரூராட்சியை திமுக முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் 12 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 1வது வார்டில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா என்பவரும், 2வது வார்டில் ராஜேஸ்வரி என்பவரும், 11வது வார்டில் சிவகுமார் என்பவரும் சுயேச்சையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 9 வார்டுகளில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து, பிப்ரவரி மாதம் 7-ம் தேதி, கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து கடம்பூர் பேரூராட்சிக்கான 9 வார்டுகளில் மட்டும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 9 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், திமுக 7 வார்டுகளிலும், மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. மேலும் 13 சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கினர். அதிமுக சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தல் மொத்தமுள்ள 2,470 வாக்குகளில் 1,598 பேர் தேர்தலில் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில், 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, இன்று கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் நடைபெற்ற 9 வார்டுகளில், திமுக கூட்டணி 8 இடங்களை கைப்பற்றியது. திமுக 6 இடங்களிலும், மதிமுக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் கடம்பூர் பேரூராட்சியை முதல் முறையாக திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications