தேர்தல் முடியட்டும்.. ரெண்டா உடையப் போகுது.. என்ன இப்படிச் சொல்லிட்டார் ராஜேந்திர பாலாஜி!
தூத்துக்குடி: வருகிற 23-ம் தேதிக்கு பிறகு, திமுக இரண்டாக உடைய போகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் பகுதியில், அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீதிவீதியாக சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23-ம் தேதி 11 மணிக்கு பிறகு, வாக்கு எண்ணிக்கை முடிவு வரும்போது, அதிமுக முன்னிலை, முன்னிலை என்ற தகவல் வரும் என்று கூறினார்.

4 தொகுதிகளில் டெபாசிட் வாங்கவே மற்ற கட்சிகள் போராடி வருவதாகவும், ஸ்டாலினும், டிடிவி தினகரனும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், அண்ணா- கருணாநிதி காலத்தில் இருந்தவர்கள் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள், ஒரு அணியாகவும், திமுக இரண்டாக உடைய போகிறது என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.
முன்னதாக, 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நமது வேட்பாளர் மோகனை வெற்றி பெற வைத்தே தீரவேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகள் எடப்பாடியாரின் எக்கு கோட்டையாக உள்ளது என்றார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை கவிழ்க்க எதிரிகள் ஒருபுறம், துரோகிகள் மறு புறம் கைகோர்த்து செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர். கிராமங்கள் தோறும் எடப்பாடி பழனிசாமி அலைதான் வீசுவதாக பேசினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications