நானே குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தர்றேன்.. நிர்வாகிகள் கூட்டத்தில் கலகலத்த துரைமுருகன்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
ஸ்டாலின் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் : அடித்து சொல்லும் துரைமுருகன்!- வீடியோ
தூத்துக்குடி: தேர்தல் முடிந்த பின்னர் நானே குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தருகிறேன் என துரைமுருகன் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
துத்துக்குடி ஸ்பிக் நகரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது தனக்கே உரிய பாணியில் கலகலத்தார் துரைமுருகன்.

அவர் பேசியதாவது, தி.மு.க தலைவர் ஸ்டாலினை தலைகுனிய வைக்கமாட்டோம் என ஒவ்வொரு நிர்வாகியும் தங்களின் தாய் மீது சத்தியம் செய்து களத்தில் பணியாற்ற வேண்டும். அப்போது தான் சிறப்பாக பணி செய்வீர்கள்.
கட்சியில் உள்ள பூசல்களை தேர்தல் முடியும்வரை மறக்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் நானே வந்து குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தருகிறேன் என்று கூறினார் துரைமுருகன். அவரது இந்த பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications