விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ரெடியாகுது.. மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குனர் மூக்கையா பேட்டி
தூத்துக்குடி: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இஸ்ரோ மகேந்திரகிரி விண்வெளி ஏவுதள வளாகத்தில் 'ககண்யான் திட்டம்' எனப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்க்காக இயந்திர வடிவமைப்புக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக மகேந்திரகிரி மைய இயக்குனர் டி. மூக்கையா கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "'சந்திரயான் 2' செயற்கைக்கோள் நேற்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த ராக்கெட் செலுத்துவதற்காக எல்.100 மற்றும் சி.25 ஆகிய நிலையிலான இயந்திர வடிவமைப்பில் ஈடுபட்டோம். நிலவுக் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம்

இது இலக்கை விட 6 ஆயிரம் கிலோமீட்டர் அதிக தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மேலும் பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி ஆகிய ஏவுகணைகளை செலுத்துவதற்காக மகேந்திரகிரி வளாகத்தில் இருந்து இன்ஜின் வடிவமைப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கிருந்து நான்கு, ஐந்து விண்கலங்கள் அனுப்பட உள்ளது.
இந்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். வரும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு உளளது.
நேற்று அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 2 விண்கலமானது செப்டம்பர் 6ஆம் தேதி இரவு நிலவில் தென்துருவ பகுதியை அடையும். செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 2 மணி 43 நிமிடத்திற்கு நிலவில் இறங்கும். அங்கிருந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல்களை அளிக்கும். மனிதனை விண்வெளிக்கு அனுப்ப கூடிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக இயந்திரம் வடிவமைப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக திட்டங்களையும் மகேந்திரகிரி மையம் மேற்கொண்டு வருகிறது" இவ்வாறு கூறினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications