ஃபுல் மப்பு.. மனைவியுடன் சண்டை.. பைக்குக்கு தீ.. லுங்கியுடன் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு!
பைக்குக்கு தீ வைத்த நபரின் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
தூத்துக்குடி: வீட்ல பொண்டாட்டியுடன் சண்டை.. ஃபுல்மப்பில் நடுரோட்டுக்கு வந்த கணவன்.. பைக்கை தீ வைத்து கொளுத்தி விட்டு, வெறும் லுங்கியுடன் பைக்கையே சுற்றி சுற்றி வந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமயில். பிளம்பிக் வேலை பார்க்கிறார். குடிப்பழக்கம் இவருக்கு உள்ளது. வழக்கமாக வீட்டு செலவுக்கு பணம் தருபவர் 2 நாளாக தரவில்லை.
இதைபற்றி வேலுமயில் மனைவி கேட்டதற்கு, ஹெல்மட் போடாம பைக்கில் வந்தேன்.. அப்போ என்னை போலீஸ்காரங்க வழி மறிச்சுஃபைன் போட்டுட்டாங்க. என்கிட்ட இப்போ பணம் இல்லை" என்றார்.

வேலுமயில்
"குடிச்சிட்டு வண்டி ஓட்டினா இப்படிதானே நடக்கும்? வேலைவெட்டிக்கு போகாத உனக்கு பைக் எதுக்கு? " என்று கேட்டுள்ளார். இதை கேட்டதும் போதையில் இருந்த வேலுமயிலுக்கு கோபம் வந்துவிட்டது. அதனால், வீட்டிலிருந்து பைக் எடுத்து கொண்டு தாமோதரநகர் ஜங்ஷனுக்கு வந்தார்.

பைக்
அந்த ஜங்ஷனில் பைக்கை நிறுத்திவிட்டு, இந்த பைக் இருக்க போயிதானே எல்லாரும் ஃபைன் போடுறீங்க.. இது இல்லேன்னா என்ன பண்ணுவீங்க" என்று கேட்டு கொண்டே தன் சட்டையை கழற்றி அந்த பைக்கில் உள்ள பெட்ரோலில் நனைத்து தீ வைத்து பற்ற வைத்துவிட்டார்.

ஹெல்மட்
இதை பார்த்து அந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். "ஏன் கொளுத்தனீங்க" என்று அங்கிருந்தோர் கேட்கவும், ஹெல்மெட் போடலைன்னு ஃபைன் போட்டாங்க என்று உளறி கொண்டே அங்கேயே சுற்றி சுற்றி வந்தார். தகவலறிந்து வந்த தென்பாகம் போலீசார் தண்ணீரை ஊற்றி பைக் தீயை அணைத்தனர்.

தகராறு
இந்த பைக் எரிவதை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுவிட்டனர். இதனால் போலீசார் ஃபைன் போட்டதால்தான் பைக்கை வேலுமயில் கொளுத்தியதாக தகவல்கள் பரவின. உண்மை காரணம் போலீசார் இல்லை.. இதுகுடும்ப தகராறுதான் என்பதும், வேலுமயில் போதையில்தான் இதை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நடுரோட்டில் பைக்கை கொளுத்திவிட்டு, லுங்கியுடன் அதனையே சுற்றிசுற்றி வந்த வேலுமயிலின் இந்த வீடியோதான் வைரலாகிறது.












Click it and Unblock the Notifications