மதிமுக ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம்... திமுக கூட்டணி பற்றி வைகோ பேச்சு
திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக் குளத்தில் பூத்து கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு வைகோ பேசியதாவது;

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இருபது தொகுதிகளிலும், திமுக வெற்றி பெற மதிமுக தொண்டர்கள் உழைப்பார்கள் என உறுதியளித்தார்.
மேலும், திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
எற்கனவே, திமுக கூட்டணியில் மதிமுக, விசிக இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை இருகட்சிகளின் தலைவர்களும், தனிதனியாக சந்தித்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நினைவிற்குரியது.












Click it and Unblock the Notifications