விஷத்தை கக்கி வருகிறார்.. கமலின் நாக்கை அறுக்க வேண்டும்.. ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு
தூத்துக்குடி: சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் தேர்தல் பிரசாரம் செய்த கமல்ஹாசன் கூறுகையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வருகிறது.

நாக்கை அறுக்க வேண்டும்
இந்த நிலையில் தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும்.

சக்திகளுக்காக
யாரை திருப்திப்படுத்த கமல் இவ்வாறு பேசி வருகிறார். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேசிஆரை சந்திப்பது
எந்த மதத்தையும் புண்படுத்தும்படி பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமல் கட்சியை தடை செய்ய வேண்டும்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், கேசிஆரை சந்திப்பது குழிபறிக்கும் செயலாகும்.

5-ஆவது அணி
4-ஆவது அணி அல்ல 5-அணி அமைந்தாலும் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவார். ஸ்டாலினுக்கு தனி கொள்கை கிடையாது, அவர் அரசியல் நாடகம் நடத்துகிறார். ஸ்டாலின்- கேசிஆர் சந்திப்பு காங்கிரஸுக்கு திமுக செய்யும் பச்சை துரோகம் ஆகும் என்றார் ராஜேந்திர பாலாஜி.












Click it and Unblock the Notifications