சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு.. சிபிஐக்கு அதிரடி மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு!
கோவில்பட்டி: கோவில்பட்டி சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.

லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீசார் ஏற்கனவே டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும் என்றும் மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று நேற்றே தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார்.
நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டபின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால் இன்று மதுரை ஹைகோர்ட்டில், வழக்கை சிபிஐக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று மதுரை ஹைகோர்ட் கிளை அறிவித்து இருந்தது.
Recommended Video
இதையடுத்து தற்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிஐக்கு வழக்கை மாற்றுவது தொடர்பாக தமிழக உள்துறை அரசாணை வெளியீட்டுள்ளது.
-
விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications