திருச்செந்தூர் பக்தர்களுக்கு தடை! தூத்துக்குடியை துவட்டும் மழை! துண்டான சாலைகள்.. தவிக்கும் மக்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இன்றும் நாளையும் வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று கடற்கரையை நெருங்கி உள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது .தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து வலுவிழக்கும் நிலையில் 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருவதால் பல பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகரப் பகுதிகள், ராஜீவ் காந்தி நகர், ராம்நகர், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் திருநெல்வேலி மற்றும் மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61 ஆயிரம் கன அடி நீரும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 54,000 கன அடி நீரும் உப்பாற்று ஓடையில் சுமார் 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையிலும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு இன்று நாளையும் (14, 15-12-2024) வெளியூரில் இருந்து பொதுமக்கள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புயல் சின்னம் உருவானபோது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலை ஒட்டிய கடல் பகுதிகள் சுமார் 100 அடி தூரத்திற்கு உள் வாங்கியது. இதை அடுத்து ஆபத்தான முறையில் பொதுமக்கள் செல்பி எடுத்தனர். இதனால் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications